எனக்கு உயிர் கொடுத்தார்கள்
எத்தனை எத்தனை வடிவங்களில்
எத்தனை எத்தனை நிறங்களில்
என்னால் அவர்களுக்கு வருமானம்தான்
மக்களுக்கும் நான் பயன்படுகிறேன்
பயன்பாட்டின் காலம் குறைவு
என் அழிவின் காலமே இல்லையென்பதை
எப்போது யார் உணருவார்கள்
நான் காற்றிற்கு பட்டமாக
நிலத்திற்கு எதிரியாக
நீருக்குத் தடையாக
வான் மழைக்கு இடைஞ்சலாக
கால்நடைக்கு வி`மாக
உருவாக்கியவனுக்கு சவாலாக
எங்கும் எனது ராஜ்யமாக
இருந்துக் கொண்டிருக்கிறேன்
நான் செய்யும் தீமைகளைப் பார்க்க பார்க்க
எனக்கே அச்சமாக இருக்கிறது
நானே சொல்கிறேன்
என்னை எப்படியேனும் அழித்துவிடுங்கள்
முடியவில்லையென்றால்
என்னை உருவாக்காமலேயே விட்டுவிடுங்கள்
இந்த வாழ்க்கை எனக்கு வேண்டாம்
பாவம் இந்த உலகம் பிழைத்துவிட்டுப் போகட்டும்.
Sunday, February 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment