Sunday, February 10, 2008

பூக்காதோ புது யுகம்

பூக்காதோ புது யுகம்
வாழ்வோமோ நலமுடன்
வருமோ அதிர்ஷ்டம்
கிடைக்குமோ வேலை
இருப்போமோ உயிருடன்
முடியுமா நம்மால்
என்றெடுத்ததெற்கெல்லாம்
சந்தேகத்தை நாமே யெழுப்பி
நம்பிக்கையை
நாமே மறந்துவிட்டால்
பூக்காதோ புது யுகம்
என்றே தான் ஏக்கத்தோடு
என்றென்றும் இருக்க வேண்டும்
பூக்காதோ புது யுகம் அல்ல
பூக்கும் புது யுகம்
என்ற நம்பிக்கையில்
எண்ண விதைகளை
எண்ணிக்கையின்றி
இதயமெனும் தோட்டத்தில்
ஆழ ஊன்றினால்
பூக்குமே புது யுகம்

No comments: